தமிழகத்தின் முதுகெலும்பே உழவு தான். இது இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் தற்போது தரிசு நிலங்களாக மாறி வருகிறது.வயல்வெளிகள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகிறது. உழவையும் அதன் பலன்களையும் மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நிகழ்சிதான் உழவன்.
இந்த நிகழ்சியில் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள், மரங்களின் வகைகளின் அவைகளின் அவசியங்கள், பயிர் வகைகள், செடிகளின் தன்மைகள் அவற்றின் மகத்துவம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் விதைகள், மண் விளைச்சல்களுக்கு உகந்தது எது?, எது போன்ற உரங்களை பயன்படுத்தலாம் என அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வருகிறது “உழவன்” நிகழ்ச்சி. உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்சியை யோகேஷ் தொகுத்து வழங்குகிறார்.