சென்னை பெசண்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு குறித்த நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் மையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
உடன் இத்துறையின் முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் வி.அன்பு செழியன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைகூடுதல் இயக்குநர் வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.