வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு இன்று (29.06.2018) புதுடில்லியில் மாண்புமிகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா அவர்களை சந்தித்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் நன்றி தெரிவித்தார். மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி பிரீத்தி சுடான், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.