பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது

PADITHATHIL PIDITHATHU-1
Faceinews Logo - Copy

                                                                      “படித்ததில் பிடித்தது”

                                        (சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு )

பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

இது வரை இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ,முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ்  ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் வரும் வாரம் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் எழுத்தாளர் கண்மணி ராஜாமுகமது கலந்துகொண்டு, அவரது வாழ்க்கையில் தன்னை கவர்ந்த ,எழுத ஊக்குவித்த ,  தன் பாதையை மாற்றி வாழ்க்கைக்கு வழி காட்டிய ,மனதை பாதித்த  தாக்கங்கள் பற்றி உணர்வுப் பூர்வமாகப் மூன்று புத்தகத்தை பட்டியலிடுகிறார்.

இவர் கலந்து கொண்ட படித்ததில் பிடித்தது நிகழ்ச்சி, பெப்பர்ஸ் டிவியில் சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு  ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்

Faceinews.com