திமுக சேப்பாக்கம் பகுதி துணைத் தலைவர், சமூக ஆர்வலர் பா.சிதம்பரம் நிறுவனத் தலைவராக நடத்தி வரும் “உங்களில் ஒருவன் மகளிர் குழு” சார்பில் பெண்களுக்கு, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா.
உங்களில் ஒருவன் மகளிர் குழு சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மஹாவீர் ஜெயின் பவன் திருமண மண்டபத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி துணைச் செயலாளரும், உங்களில் ஒருவன் மகளிர் குழு தலைவருமான சமூக ஆர்வலர் திரு. பா. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி ( ஊக்க) உதவித்தொகை வழங்கினார். இதில் திறளான மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.