A. சசிகலாவின் உலகத் தமிழ் மகளிர் பேரவை நிகழ்த்திய சர்வதேச தாய்மொழி தின விழா

IMG-20190226-WA0093

Faceinews Logo - Copy

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. K. பாண்டியராஜன் தலைமை விருந்திராக கலந்துக் கொண்டு தலைமை உரையாற்றினார்.

A. சசிகலா நிறுவனத் தலைவராக விளங்கும் உலகத் தமிழ் மகளிர் பேரவை சார்பாக சென்னை, மாநிலக் கல்லூரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் அரங்கில், மாநிலக் கல்லூரி முதல்வர் R. இராவணன் அவர்களின் தலைமையில் சர்வதேச தாய்மொழி தின விழா 21/02/2019 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு நடைப்பெற்றது.

IMG-20190226-WA0096

இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக திரு. சசிந்திரன் முத்துவேல், கவர்னர், பப்புவா நியூ கினியா, திருமதி. ஏஞ்சல் நாகமுத்து ஜோசப், D/o. மோசஸ் நாகமுத்து – பிரதம மந்திரி கயானா, நிர்வாக இயக்குனர் சன்ரைஸ் ஹோல்டிங் & கம்பெனி கலந்துக் கொண்டனர்.

IMG-20190226-WA0097

வரவேற்புரையை A. சசிகலா வழங்க, அறிமுக உரையை Drm ஸ்ரீகலா வழங்கினார். வாழ்த்துரையை முனைவர். உலகநாயகி பழனி, இயக்குனர் – தமிழ் வளர்ச்சிக் கழகம், மெட்ராஸ் யுனிவர்சிட்டி, அருட்பணி ம. ஜெகத் கஸ்பர், நிறுவனர் சங்கம் 4, வி.ஆர்.எஸ். சம்பத், ஆசிரியர், சட்டக் கதிர், ரூஸ்வெல்ட், ஆகியோர் வழங்கினர்.

IMG-20190226-WA0090

நன்றியுரையை முனைவர். மு. முத்துவேல், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை வழங்கினார்.

இவ்விழாவிற்கு, மாநிலக் கல்லூரி மாணவ/மாணவியர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். மேலும், தமிழ் அறிஞர் பெருமக்கள், தமிழ் ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

IMG-20190226-WA0091

Faceinews.com