உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மதராசபட்டினம் விருந்து என்கின்ற பாரம்பரிய உணவு திருவிழா லோகோ வெளியீடு
சென்னை : தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மதராசபட்டினம் விருந்து” என்கின்ற மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை தீவுத்திடலில் வருகின்ற 13ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான பிராண்ட் மற்றும் லோகோவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர்.பீலா. ராஜேஷ்,தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் திருமதி. பாரிஜாதம், பொது சுகாதார துறை இயக்குனர் மரு.சோமசுந்தரம், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன் உள்பட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.