ஆஸ்திரேலியாவின் மட்டைப்பந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரருமான உயர்திரு. ஜான் வாட்சன் அவர்கள் 14.10.2019, திங்கட்கிழமை அன்று வேலம்மாள் வித்யாலயா மேல் அயனம்பாக்கம் பள்ளிக்கு வருகை தந்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
உயர்திரு சான் வாட்சன் அவர்களை பள்ளி மாணவர்கள் நடனங்கள் ஆடியும், பூங்கொத்துக்களை வழங்கியும், இந்திய தேசியக்கொடி மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய கொடிகள் அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்கலையில் சிறந்த பல்கலைக்கழகமாய் திகழும் வேலம்மாள் பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான உயர்திரு சான் வாட்சன் அவர்களின் வரைபடத்தை வழங்கி சிறப்பித்தனர். ஆஸ்திரேலிய பாடலுக்கு நடனம் ஆடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடல்களைப் பாடியும் சிறப்பு செய்தனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட மட்டை பந்து வீரர் உயர்திரு சான் வாட்சன் அவர்கள் சர்வதேச விளையாட்டில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். இவ் விழாவின் முத்தாய்ப்பாக நவீன மட்டைப்பந்து ஆடுகளத்தை திறந்து வைத்தார் மேலும் பல்கலையில் திறந்த பல்கலைக்கழகமாய் திகழும் வேலம்மாள் பள்ளி பல்கலை அரங்குகளை திறந்து வைத்து சிறப்பித்தார்.
மேலும் வேலம்மாள் வித்யாலயா, பூந்தமல்லி வேலம்மாள் வித்யாலயா, மாங்காடு பள்ளிகளுக்கு வருகை தந்து விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வேலம்மாள் பள்ளி மாணவர்களை பாராட்டினார்.
இவ்விழா மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் சர்வதேச சாதனைகளை படிப்பதற்கு உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது.