சில நாட்களுக்கு முன் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் நிலசரிவு ஏற்பட்டு பல உயிர்கள் பலியானார்கள். அந்த பகுதியே மிகவும் சேதாரமடைந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருநங்கைகளால் உருவாக்கப்பட்டு பலருக்கும் உதவியலித்து வரும் சென்னை வண்ணமலர்கள் திருநங்கைகள் சுய உதவிக் குழு நிதிதிரட்டியும், தங்களது சுயதொழிலில் கிடைத்த வருமானத்தையும் சேர்த்து ரூ.5000. பணத்தை கேரளா முதலமைச்சர் வயநாடு நிவாரண நிதி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்கள்.



