வேந்தர் டிவியில் சித்திரைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் புதுமையான நிகழ்ச்சி “விளம்பி புத்தாண்டு ராசி பலன்கள் –ஓர்கணிப்பு”.
இந்நிகழ்ச்சி வரும் 14.04.2018 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. பிறக்கவிருக்கும் விளம்பி வருடத்தில் பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்களை பற்றியும் எது யோக ராசி, எது லாப ராசி எனவும்கணிப்பதற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 15 ஜோதிட வல்லுனர்கள் கலந்துகொண்டனர். முத்தாய்ப்பு வைத்தாற்போல் யதார்த்த ஜோதிடர்ஷெல்வீ, சேலம் நர.நாராயணன், வேதாரண்யம் மூர்த்தி, திருப்பூர் கணியர் ராஜசேகர் மற்றும் திருப்பபூர் தணிகாசலம் ஆகியோர் நடுநாயகமாய் வீற்றிருந்துபலன்களை சொல்ல, ஜோதிடர்களிடம் தமிழ் புத்தாண்டில் தங்கள் நிலை என்ன என்று கேட்டறியும் வகையில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்ப் புத்தாண்டு – சிறப்பு பட்டிமன்றம்
வேந்தர் டிவியில் வரும் சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
“இன்றைய இல்லத்தரசிகள் மிகவும் விரும்புவது அன்பான கணவனா..? அறிவான கணவனா…?” என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தின்நடுவராக நகைச்சுவை நடிகர் Y.G.மகேந்திரா பங்கேற்கிறார். மற்றும் தமிழகத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசும் இந்த பட்டிமன்ற நிகழ்ச்சி,கலகலப்பாகவும் சிந்தனையை தூண்டும் வகையிலும் சிறப்பு பட்டிமன்றமாக ஒளிபரப்பாகவிருக்கிறது.