கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்ட புற்றுநோய் நோயாளிகள் மற்றும் ஏழைஎளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 500க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர்.
டாக்டர் அனிதா ரமேஷ் வினியோகித்தார்.
இதன் தொடர்ச்சியாக
இன்று தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் மீடியா நபர்கள் 100 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பினை
டாக்டர் அனிதா ரமேஷ் விநியோகித்தார்.
மேலும் அவர் பேசுகையில்… தொடர்ந்து 25 நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம் இன்றும் நாவலூர் மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு 500 அரிசி அடங்கிய தொகுப்பினை வழங்கினோம் மேலும் செய்தியாளர்களுக்கு வழங்கியுள்ளோம் மேலும் எங்களது பணி தொடரும்



