பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்து சில குறப்பிட்ட நபர்கள் பிச்சை எடுக்க வைத்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு பச்சிளம் குழந்தைகளை கடும் வெயிலிலும்.,
மழைகாலங்களிலும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் இடத்திலும் குளச்சல் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பஸ் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.
பணம் கொடுக்க மறுப்பேர்களை தரகுறைவான வார்த்தைகளில் திட்டுவதும்,
சாபம் விடுவதும் வாடிக்கையாக உள்ளது..
மேலும் இதை கண்டு மனம் குமறும் பயணிகள் இவர்களிடம் கேட்கும் போது அவர்களையும் அடிப்பதற்கு கை ஒங்குகிறார்கள்..
மேலும் இந்த குழந்தைகளை வைத்து வசூல் ஆகும் பணத்தில் மது வாங்கி அருந்தி அந்த போதையினால் பல்வேறு பிரச்சினைகள் குழப்பங்கள் குளச்சல் பஸ் நிலையத்தில் வருகிறது..
குழந்தைகள்
வன் கொடுமை சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இவர்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க
குளச்சல் நகர பொதுமக்கள் மற்றும்
சமுக ஆர்வலர்கள்
அரசுக்கு கோரிக்கை
வைத்துயுள்ளனர்.



