ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளுக்கு ஒரு புதிய குடும்பம் உருவாக்கி வரும்
திண்டுக்கல்
மாவட்டம்.,
நத்தம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்
தேவா..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த ப.தேவேந்திரன் (நத்தம் தேவா) சமூக ஆர்வலர்.. பொதுவான இடங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை மீட்டு அதனை பராமரித்து அதற்கு ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்து வருகிறார்.
பொதுவான இடங்களில் மீட்கப்படும் நாய்க்குட்டிகளை தனது வீட்டின் அருகில் அடைக்கலம் கொடுத்து அந்த நாய்குட்டிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் “யாரேனும் தத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற வாசகத்துடன் பதிவிட்டும்.,மேலும் அந்த நாய் குட்டிகளை யாரேனும் தத்தெடுத்துக் கொள்ள முன் வந்தால் அவர்களது இல்லம் தேடி மீட்கப்பட்ட நாய்க்குட்டிகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறார். அதிகப்படியான மக்கள் பெண் நாய்குட்டிகளை ஒதுக்கி அதனை தெருவில் விட்டுச் செல்கின்றனர்கள்..
இவர் இதுவரை அதிகப்படியான பெண்நாய் குட்டிகளை மட்டுமே மீட்டு உள்ளார்… பெண் நாய் குட்டிகள் சாபங்கள் அல்ல நாளைய சந்ததியின் விருட்சங்கள்.,
நலமுடன் வாழ்வோம் வீட்டிற்கு ஓர் பெண் நாய்குட்டியை வளர்ப்போம். இதுபோன்று பொதுவான இடங்களில் ஆதரவற்ற நிலையில் நாய்க்குட்டிகள் சுற்றி திரிந்தால் அழையுங்கள்..
நத்தம் தேவா
8144845947


