ஃபெர்ரெரோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது புதுமைத் தயாரிப்பான –டிக் டாக் ‘சீட்ஸ்’ களை அறிமுகப்படுத்தி இந்திய நுகர்வோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் குறிக்கோளைக் கொண்டுள்ளது

ஃபெர்ரெரோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது புதுமைத் தயாரிப்பான –டிக் டாக் ‘சீட்ஸ்’ களை அறிமுகப்படுத்தி இந்திய நுகர்வோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் குறிக்கோளைக் கொண்டுள்ளது

டிக் டாக் சீட்ஸ் இந்தியா முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.10 க்கு கிடைக்கிறது

சென்னை : பேக்கேஜ் செய்யப்பட்ட இனிப்புத் தயாரிப்புகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபெர்ரெரோ குழுமத்தின் ஒரு அங்கமான ஃபெர்ரெரோ இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் கன்ஃபெக்ஷனரி பிராண்ட், டிக் டாக் சீட்ஸ் இன் இரண்டு வகைகள் – சான்ஃப்(saunf) மற்றும் ஜிஞ்சர் ஏலக்காய் (Ginger cardamom) சுவைமணங்களில் வெளியிடப்படுவதை இன்று அறிவித்தது

விதைகள், மசாலாப் பொருட்கள், சர்க்கரை இன்னும் பல போன்ற மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட வாய்க்கு புத்துணர்சி அளிக்கும் பொருட்களை ஒரு உணவு உண்டபின் நுகர்வது அனைத்து இந்தியர்களின் பாரம்பரியத்தில் வலிமையாக வேரூன்றிய ஒரு பழக்கம். இந்தப் பழக்கத்தை கருத்தில் கொண்ட டிக்டாக் புதுமையான ஒன்றை கண்டறிந்து அதை மேம்படுத்தி, நசுக்கப்பட்ட விதைகளால் அதன் மையப் பகுதியை நிரப்பி ஒரு மொறுமொறுப்பான ஓடு போன்ற மேற்பரப்போடு நீண்ட நேரம் நிலைத்த தனித்துவமான சுவை அனுபவத்தை அளிக்கும் ‘டிக்டாக் சீட்ஸ்’ ஆக அறிமுகப்படுத்தியது.

புத்துணர்ச்சியூட்டும் பாரம்பரியத்தில் நிலைநாட்டப்பட்ட புதுமையான ‘சீட்ஸ்” இன் புதுப்புனைவு புத்துணர்ச்சியாளிக்கும் தயாரிப்பு பிரிவில் டிக்டாக்கின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக விளங்குகிறது.

டிக் டாக் சமீபத்தில் அதன் விலை நிர்ணய முன்மொழிவையும் ரூ. 1 ஆக விரிவுபடுத்தி மேலும் அதிகளவிலான நுகர்வோர்கள் அதை அணுக வழிவகை செய்துள்ளது. டிக் டாக் சீட்ஸ் இந்திய ரூபாய் 1 மற்றும் இந்திய ரூபாய் 10 என்ற இரண்டு விலைப்புள்ளிகளிலும் கிடைக்கும். டிக் டாக் சீட்ஸ் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ ஒரு தயாரிப்பு பொருள், அது புனே,பாரமதியிலுள்ள , ஃபெர்ரெரோ இந்தியாவின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதன் வெளியீட்டின் போது கருத்து தெரிவித்த டிக்டாக் ரோச்சர் நூட்டெல்லாவின் இந்திய மார்க்கெட்டிங் தலைவரான திருசோஹர் கபூஸ்வாலா, கூறினார், “ இந்தியா சிறு சிறு அளவிலான பரிவர்தனைகளை மேற்கொள்ளும் ஒரு சந்தை. அனைத்து பாரம்பரிய நடவடிக்கைகளிலும் இந்தியாவுக்குள்ள ஈர்ப்பை அறிந்து கொள்ள இந்திய இளைஞர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு பரந்த விரிவான சந்தை ஆய்வின் அடிப்படையில் டிக்டாக்”சீட்ஸ்” இன் புதுப்புனைவு நிறைவேறியிருக்கிறது. டிக் டாக் சீட்ஸ் இன் வெளியீடு நமது தயாரிப்பு வரிசையின் உடைமைப்பட்டியல் விரிவாக்கப்படுவதை அடையாளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நுகர்வோரின் பாரம்பரிய சுவைகள் குறித்த நமது புரிதலையும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. ரூ.1 என்ற புதிய விலை நிர்ணய யுக்தி நமது சந்தை அடித்தளத்தை மேலும் விரிவாக்க நமக்கு உதவும். மற்றும் டிக்டாக் சீட்ஸ் ஐ மேலும் அதிகளவிலான நுகர்வோர்கள் அணுகுவதற்கும் வழிவகுக்கும்”

இந்தியர்களின் சுவை அரும்புகளின் பல்வேறு பட்ட சுவை உணர்வுகளை நிறைவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டுவரும் டிக்டாக் நிலையாக தொடர்ந்து மிக உயரிய சுவை மணங்களை கண்டறிந்து வருகிறது. தற்போதைய சுவைமணங்களின் கலவையில் – மின்ட், ஆரஞ்சு, சான்ஃப், மற்றும் ரெட் ஆப்பிள் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த பிராண்ட் தன் நுகர்வோர்களுடனான இணைப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு முயற்சிதான் டிக் டாக் சீட்ஸ். பாரம்பரியத்தின் நன்மைகளுக்கு எந்தஒரு சமரசமம் இல்லாமல் புத்துணர்ச்சியளித்து நீடித்து நிலைக்கும் சுவை அனுபவத்துக்கு இது உறுதியளிக்கிறது. வரும் ஆண்டுகளில் டிக்டாக்சீட்ஸ் இன் கீழ் மேலும் அதிக சுவைமணங்களை அறிமுகப்படுத்தி நிறுவனம் தனது தயாரிப்பு உடைமைப் பட்டியலை இன்னும் விரிவாக்கும் , .

கொண்டாட்டம், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் தொடர்பு ஆகியவற்றுக்கான பிராண்டாக டிக்டாக் நிலைபெற்றுள்ளது. உட்புறம் பல பில்ஸ்களைக் கொண்ட பேக்கின் அடையாளச் சின்னமாக விளங்கும் ஃப்ளிப் மேல் மூடி மற்றும் சலசலவென்ற ஆரவாரமான ஒலி ஆகிய அதன் தனித்துவமான சிறப்பியல்புகள் டிக் டாக்கை இதர பிராண்டுகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும் உந்து சக்தியாக விளங்குகிறது.

 

 

 

 

 

Faceinews.com