க. முத்து அவர்களின் “”காலை கடல்”” தினசரி பத்திரிகை துவக்க விழா

காலை கடல் நாளிதழ் துவக்க விழா 5.06.2023 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதல் பிரதியை காலை கடல் ஆசிரியர் க.முத்து அவர்கள் வெளியிட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சிறப்பு விருந்தினராக பீப்பிள் டுடே ஆசிரியர் கோ.சத்யநாராயணன், நாற்காலி செய்தி ஆசிரியர் கார்த்திகேயன், நமது போலீஸ் ஆசிரியர் கழுகு வீரராகவன், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், மெட்ரோ மேன் ஆசிரியர் அன்பு, ரிப்போர்ட்டர் பிளாஷ் ஆசிரியர் பாலாஜி,

அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், தொட்டில் செய்தி ஆசிரியர் முருகேசன், மாலை தீபம் ஆசிரியர் முகுந்தன், ராஜ கர்ஜனை ஆசிரியர் இரா.இளஞ்செழியன், மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், திராவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, நமது நகரம் புகழேந்தி, பாலசுப்பிரமணியன், பேனா முள் ஞானராஜ், சட்ட களஞ்சியம் ராஜமணி, மண்ணின் குரல் தினேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்..

காலை கடல் எஸ்.ஜாகிர் உசேன் இணை ஆசிரியர் ஆர்.ராஜேஸ்வரன் கடல் சிற்பி நிருபர் மணிகண்டன் திருவள்ளூர் மாவட்ட நிருபர் யுவராஜ் திருவள்ளூர் மாவட்ட போட்டோகிராபர் வெங்கட், கடல் சிற்பி நிர்வாக ஆசிரியர் ஆர் ரமேஷ் கடல் சிற்பி துணை ஆசிரியர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Faceinews.com