புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சிகர முன்னேற்றம்! || CAR-T செல் தெரபியை அறிமுகப்படுத்தும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
சென்னை, 15th May 2025 — சென்னை மாநகரில் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு பெரிய முன்னேற்றமான சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் (CAR-T) சிகிச்சை திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்த அறிமுகத்தின் மூலம் குறிப்பிட்ட சில இரத்தப் புற்றுநோய்களுக்கு மேம்பட்ட வடிவிலான நோய் எதிர்ப்பு சிகிச்சையை இந்தியாவில் வழங்கும் வெகுசில மருத்துவமனைகள் பட்டியலில் ஒன்றாக காவேரி மருத்துவமனையும் இடம் பிடித்திருக்கிறது.
CAR-T சிகிச்சை என்பது புற்றுநோயை எதிர்த்து போரிட டி-செல்கள் என அழைக்கப்படும் நோயாளியின் சொந்த நோய் எதிர்ப்புத்திறன் செல்களை பயன்படுத்துகிற நோயெதிர்ப்பு சிகிச்சையின் ஒரு வகையாகும். நோயாளியின் சொந்த இரத்தத்தில் இருந்து இந்த டி-செல்களை மருத்துவர்கள் எடுத்து, புற்றுநோய் செல்களை சிறப்பாக அடையாளம் கண்டு அவைகளை தாக்குவதற்கு ஏற்றவாறு பரிசோதனையகத்தில் மறுவடிவாக்கம் செய்கின்றனர். இந்த மறுவடிவாக்க செயல்முறைக்கு பிறகு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டி-செல்கள் நோயாளியின் உடலுக்குள் உட்செலுத்தப்படுகின்றனர். அங்கு, பரவியிருக்கும் புற்றுநோய் செல்களை இவைகள் அடையாளம் கண்டு அழிக்கும்.
வழக்கமான பாரம்பரிய சிகிச்சை முறைகளுக்கு சரியாக பதில்வினையாற்றாத நேரங்களில் அந்நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. தீவிரமான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (ALL) மற்றும் உட்பரவியிருக்கும் பெரிய B-செல் லிம்போமா (DLBCL) போன்ற குறிப்பிட்ட சில இரத்தப் புற்றுநோய்களுக்கு இச்சிகிச்சை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் திரும்பவும் வந்திருக்கிற அல்லது வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காத நோயாளிகளுக்கு உதவுகிறவாறு அதிக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையை CAR-T செல் தெரபி வழங்குகிறது. மறுவடிவாக்கம் செய்யப்பட்ட டி-செல்கள் பன்மடங்காக அதிகரித்து உடலில் தீவிரமாக செயல்படும் நிலையில் இருப்பதால் புற்றுநோய் திரும்ப வருவதற்கு எதிராக தொடர்ச்சியான பாதுகாப்பை அவைகள் வழங்குகின்றன.
காவேரி மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயியல் துறையின் சிறப்பு மருத்துவரும், எலும்பு மஜ்ஜை மாற்றுப்பதிய நிபுணருமான டாக்டர். அர்ஷத் ராஜா பேசுகையில், “இரத்தப் புற்றுநோய்களுக்கு நாங்கள் சிகிச்சையளிக்கும் முறையை CAR-T செல் தெரபி மாற்றுகிறது. உள்நாட்டிலேயே இப்போது கிடைக்கும் இந்த நவீன முன்னேற்றத்தின் மூலம் இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு எமது அணுகுமுறையை இது மறுவரையறை செய்கிறது; இதன் மூலம் ஒரு காலத்தில் கிடைக்கப்பெறாமல் இருந்த உலகத்தரம் வாய்ந்த, துல்லியமான இலக்கை குறிவைக்கும் சிகிச்சையின் மூலம் இந்தியாவிலுள்ள நோயாளிகளுக்கு சிறப்பான பயனளிக்கும் சிகிச்சையை இப்போது நாங்கள் வழங்குகிறோம்” என்று கூறினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 14 லட்ச நபர்களுக்கு புதிதாக புற்றுநோய் வருவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுள் இரத்தவியல் சார்ந்த புற்றுநோய்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன. வழக்கமான கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை/உறுப்புமாற்று சிகிச்சைகள் பயனளிக்க தவறும்போது ஒரு மிக முக்கியமான சிகிச்சை விருப்பத்தேர்வை CAR-T தெரபி வழங்குகிறது. சென்னையில் இந்த நவீன சிகிச்சை கிடைக்குமாறு செய்திருப்பதன் மூலம் பெருநகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியமாக இருக்கிற தென்னிந்தியாவைச் சேர்ந்த நோயாளிகள் அதிகமாக பயனடைவார்கள்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: “CAR-T சிகிச்சை திட்டத்தை எமது மருத்துவமனையில் தொடங்கியிருப்பது, உலகத்தரங்களுக்கு இணையான புதிய சிகிச்சை வழிமுறைகளை அறிமுகம் செய்வதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் கூர்நோக்கம் சிறப்பாக பிரதிபலிக்கிறது. CAR-T சிகிச்சை திட்டத்தின் அறிமுகம், மருத்துவத்தில் சிறப்பான எதிர்காலத்திற்குள் எடுத்து வைத்திருக்கும் ஒரு தைரியமிக்க முன்னேற்ற நடவடிக்கையை குறிக்கிறது. புத்தாக்கம் மீதான எமது பெருவிருப்பம் நேர்த்திநிலையை எட்டுவதில் எமது விடாமுயற்சி மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும் எமது உறுதியான செயல்திட்டத்தை இது பிரதிபலிக்கிறது”.
இந்த நவீன சிகிச்சை முறைக்கு இதற்கு முன்புவரை குறைவான அணுகுவசதியைக் கொண்டிருந்த தமிழ்நாடு மற்றும் அண்மை மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையின் அறிமுகம் சிறப்பான பயனளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவமிக்க புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் குழுவையும் மற்றும் பிரத்யேக செல்லுலார் சிகிச்சை பிரிவையும் கொண்டிருக்கும் இம்மருத்துவமனை, கண்டிப்பான மருத்துவ நெறிமுறைகளின் கீழ் இந்த தனிச்சிறப்பான சிகிச்சையை வழங்குவதற்கு முழுமையான திறனோடு தயாராக இருக்கிறது.